வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்

அம்மனின் பெயர் :  உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை

தல விருட்சம்     :   கொன்றை

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
                                                           மாலை  4 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி : அரும்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோவில், 
சீயாத்தமங்கை -  நன்னிலம் வட்டம். நாகப்பட்டினம் - 609 702 Ph:4366-270 073

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 144 வது தேவாரத்தலம் ஆகும்.

* மூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல அம்மன் இருமலர்க்கண்ணம்மையின் நெற்றியில், சிவனைப்போல நெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது சிறப்பம்சமாகும்.திருநீலநக்க நாயனார் அவதார தலம்.

* திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: