வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோவில்



கோவில் பெயர் :  அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோவில்

சிவனின் பெயர் :   கண்ணாயிரமுடையார்.

அம்மனின் பெயர் : முருகுவளர்க்கோதை நாயகி.

தல விருட்சம் :   கொன்றை மரம்.

கோவில் திறக்கும் நேரம் :  காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                                                 மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி :  அருள்மிகு கண்ணாயிமுடையார்திருக்கோவில், 
             குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்)-609 117  
           தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 094422 58085


கோவில் சிறப்பு :

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 17 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இந்திரன் வழிபட்டுச் சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கையாகும்.

* திருமணமாகாதோர் இக்கோயிலுக்கு வந்து மாலைசாத்தி வழிபடும் வழக்கமுள்ளது.

* மாணிக்கவாசகர், சேக்கிழார், ராமலிங்க அடிகளார் தரிசனம்  செய்துள்ளனர்.

* குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அர்த்த ஜாம பூஜையில் பால், பழம் நைவேத்யம் செய்து, அன்னதானம் போட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: