செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு சோமேஸ்வரர் (குடந்தைக்காரோணம்) திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : சோமேஸ்வரர்

அம்மனின் பெயர் : தேனார் மொழியாள், சோமசுந்தரி

தல விருட்சம்   :   வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6.30 மணி முதல் 12.30 மணி வரை,
                                                        மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முகவரி : அருள்மிகு சோமேஸ்வரர் (குடந்தைக்காரோணம்)
திருக்கோவில், கும்பகோணம்,தஞ்சாவூர்- 612 001. .Ph: 0435-243 0349

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது

* இது 91 வது தேவாரத்தலம் ஆகும்.

* அமுத கும்பத்திற்கு ஆதாரமாயிருந்த சிக்கத்தில் (உறி) இருந்து தோன்றியவர். இதனால் சிக்கேசம் என்றும், பெருமானுக்கு சிக்கேசர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேசுவரர் என்றும், ஏழை சோமநாதர் என்றும், தேவிக்கு சோமசுந்தரி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. வியாழன் வழிபட்டதால் வியாழசோமேசர் என்ற பெயரும் உள்ளது. தீர்த்தம் : சோம தீர்த்தம், சந்திர புட்கரணி தீர்த்தம். இக்கோயிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்று வருகிறது

* இக்கோயிலில் 1964ம் ஆண்டு பக்தர்கள் ஒன்றுகூடி வித்தியாசமான முயற்சி ஒன்றை எடுத்தனர். ஒருவர் ஒரு லட்சம் வீதம் 100 பேர் சேர்ந்து "சிவாய நம' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை எழுதினர். மொத்தத்தில் ஒரு கோடி மந்திரம் தேறியது. எழுதியவற்றை வீணாக்காமல் பைண்ட் செய்து நூறு புத்தகங்களையும் ஒரு பெட்டகத்தில் அடுக்கி கோயிலில் வைத்துவிட்டனர். மிக அருமையான இந்த பெட்டகம் 40 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

* இக்கோயிலில் உள்ள கல்யாண விநாயகரை 11 திங்கட்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: