வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு ஞானபுரீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : ஞானபுரீஸ்வரர், இடைசுர நாதர்

அம்மனின் பெயர் :  இமயமடக்கொடி, கோபரத்னாம்பிகை

தல விருட்சம்     :   வெள்வேல மரம்

கோவில் திறக்கும் : காலை 7 மணி முதல் 11 மணி வரை, 
மாலை மணி 4.30 முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், 
திருவடிசூலம் - 603 108. திருஇடைச்சுரம், செங்கல்பட்டு. 
காஞ்சிபுரம் மாவட்டம்.Ph: 9444948937

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 260 வது தேவாரத்தலம் ஆகும்.

* சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்கள் இணைந்திருக்கிறது. சிவன், அம்பாள், விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தில் வடிவில் அருளுகின்றனர் என்பதால் இங்கு வேண்டிக்கொண்டால் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும், ஒற்றுமை கூடும் என நம்புகின்றனர். சிவன் மறைந்த குளம் ""காட்சிக்குளம்'' என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது. தலவிநாயகர்: வரசித்தி விநாயகர். கோயிலில் பிரமாண்டேஸ்வரருக்கும், பிரமாண்டேஸ்வரிக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.

* முகம் பொலிவு பெறும் என்பது நம்பிக்கை. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் தலவிருட்சத்திற்கு வஸ்திரம், மஞ்சள் கயிறு கட்டி வழிபடுகின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: