புதன், 26 அக்டோபர், 2016

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோவில்


கோவில் பெயர் : அருள்மிகு வடபழநி ஆண்டவர்  திருக்கோவில் 

முருகன் பெயர்  :                வடபழநி ஆண்டவர்


கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை 
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

முகவரி : அருள்மிகு வடபழநி ஆண்டவர்  திருக்கோவில்,
Arulmigu Vadapalani Andavar Thirukoil, 
Vadapalani, 
Palani Andavar koil street, 
Vadapalani. 
Chennai - 600026. 
Phone: 044 - 24836903 , 044 - 24802330 


கோவில் சிறப்பு :

* இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது விசேஷம்அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு தங்க தேர் உள்ளது.

* பிரார்த்தனை இங்குள்ள வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்க , வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள். நேர்த்திக்கடன்: வேண்டியதெல்லாம் தரும் வடபழநி ஆண்டவர் சன்னதியின் முக்கிய நேர்த்திகடன் முடி காணிக்கையாகும். தவிர வேல் காணிக்கை, ரொக்கம் போன்றவற்றை உண்டியலில் செலுத்துகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கை இக்கோயிலின் மிக முக்கிய வருமானம் ஆகும்.பால் , சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் ஆகிவற்றாலான அபிசேகங்கள் சுவாமிக்கு நேர்த்திகடனாக நடைபெறுகின்றன. தலபெருமை: பழநிக்கு செல்ல இயலாத பக்தர்கள் இத்தலத்து ஆண்டவரை வழிபடுவது நலம்.சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: