செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர் : அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)

அம்மனின் பெயர்: கல்யாணசுந்தரி

தல விருட்சம்   :  வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8  மணி வரை

முகவரி : அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவில், திருநல்லூர்-614208. வலங்கைமான் வட்டம், 
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.Ph:  93631 41676


கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 83 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு லிங்கமாக  இவர் தினமும் ஐந்து நிறத்தில் காட்சியளிப்பதால் "பஞ்சவர்ணேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.

* அம்மன் திரிபுர சுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். இது தவிர 8 கரங்களுடன் ஆடும் நடராஜர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், காசி விஸ்வநாதர், அகத்தியர், கணநாதர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

* மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவத்திற்காக வளைகாப்பு நடத்தியும், நினைத்த காரியம் நிறைவேறவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: