வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவில்.

சிவனின் பெயர்  : படிக்காசுநாதர் ( சொர்ணபுரீஸ்வரர்)
அம்மனின் பெயர் : வாள்நெடுங்கன்னி

தல விருட்சம்   : அழகம்மை

கோவில் திறக்கும் நேரம் :   காலை  7 மணி முதல் 12 மணி வரை, 
                                                            மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவில்
அழகாபுத்தூர் - 612 401, திருஅரிசிற்கரைப்புத்தூர், தஞ்சாவூர் மாவட்டம். 
Ph: 043542466939,9943178294

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* சோழர்களால் கட்டப்பட்டது

* இது 129 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* பொதுவாக பெருமாள்தான் சங்கு சக்கரம் வைத்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் உள்ள முருகன் சங்கு, சக்கரம் வைத்தபடி அருள்பாலிக்கிறார். நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர்.

* இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. இத்தலவிநாயகர் சொர்ண விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 

* முன்மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார், தன் மனைவி லட்சுமியுடன் காட்சி தருகிறார். அருகில் சுந்தரர், மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார். 

* சொர்ணவிநாயகர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை வணங்கியபின்பே, சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம். பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். முருகன்,

* இங்கு வேண்டிக்கொள்ள தவறை தட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: