வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்

அம்மனின் பெயர் :  தேவி கருமாரியம்மன்

தல விருட்சம்     :  வெள்வேலம்

கோவில் திறக்கும் : காலை 5மணி முதல் 12.30மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

முகவரி :  Arulmigu Devi Karumari Amman Temple
   Sannathi Street,Thiruverkadu,
Thiruperumputhur.Pincode - 600 077.
   Phone :     044 - 2680 0430, 2680 0487
   E-Mail ID :karumariamman@tnhrce.org

கோவில் சிறப்பு : 

* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது விசேசம்

* மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது.

* தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போய்க்கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்

* மிக அதிகமான வருவாயை தமிழக அரசுக்கு ஈட்டித்தரும் கோயில்களில் இது முக்கியமானது.

* குறி சொல்லும் இடமாக இருந்து பின்பு படிப்படியாக 50 வருடத்திற்குள் மிகவும் புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் கோயில்.

* சுவாமி இராமதாசர் என்னும் மகான் தான் இத்தலத்தில் ஆரம்பத்தில் குறிசொல்லிக்கொண்டிருந்தார்.அவரால்தான் இக்கோயில் பிரபலடைந்தது என்கிறார்கள்.

* அன்னையின் அருள் இங்கு வரும் பக்தர்களுக்கு திருமணம் வரம், குழந்தை வரம் வியாபார விருத்தி சுபிட்சம் ஆகியவற்றைத் தருகிறது.

* தீராத நோய்களைத் தீர்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்று செல்கின்றனர்.வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி சூன்யம் மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர்.ராகு கேது கிரகங்களால் தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: