செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : ஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர்

அம்மனின் பெயர்: ஞானம்பிகை

தல விருட்சம்    : ஆலமரம்( தற்போதில்லை), வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி : அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோவில், திருவாலம் பொழில் அஞ்சல், திருப்பந்துருத்தி - 613 103. 
வழி - திருக்கண்டியூர். திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
Ph 04365 - 284 573, 322 290

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 73 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு மூலவர் ஆத்மநாதேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அஷ்டவசுக்கள் பூஜித்த தலம்.

* . சப்த ஸ்தானத்தில் ஒன்று. இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தியாக உள்ளார்.

* கோயில் பிரகாரத்தில்மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் உள்ளனர்.

* திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: