வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்.

அம்மனின் பெயர் : அருங்கரை அம்மன்

தல விருட்சம்   : ஊஞ்சல்மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை   மணி முதல் 10 மணி வரை, 
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : கோவில் நிர்வாகக்குழு, அருங்கரையம்மன் கலைக்கல்லூரி, அம்மன் நகர், பெரியதிருமங்கலம், சின்னதாராபுரம் - 639 202. 
கரூர் மாவட்டம். P h:4320 - 233 344, 233 334, 94432 - 37320.

கோவில் சிறப்பு : 

* 500 வருடங்களுக்கு முன் பழமையானது.

* சோழர்களால் கட்டப்பட்டது

* இது 129 வது தேவாரத்தலம் ஆகும்.

* அம்பாள் கோவில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை

*  நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். இது மருத்துவத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள். கோவில் அருகே ஓடும் அமராவதி ஆறு அம்பாளுக்கு மாலையிட்டது போல இவ்விடத்தில் திரும்பிச் செல்கிறது. தொடக்கத்தில் அம்பாள் "நல்லதாய்' என அழைக்கப்பட்டாள்.

* ஆற்றங்கரையின் அருகே அமர்ந்த அம்பாள் என்பதால் இவளை "அருங்கரை அம்மன்' என்றும் அழைத்தனர். காலப்போக்கில் இந்த பெயரே நிலைத்து விட்டது.ருக்கிறார். 

* பெண்கள் இந்த ஆலயத்திற்குள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. வெளியில் நின்றுதான் வணங்க வேண்டும். ஆண்கள் மட்டுமே உள்ளே சென்று வணங்குகின்றனர். 

* குடும்பம் சிறக்க, விவசாயம் செழிக்க அம்பாளிடம் வேண்டிக் கொள்கின்றனர். காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டியும், குதிரை பொம்மைகள் செய்து வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றன

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: