வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்

அம்மனின் பெயர் :  மங்களாம்பிகை

தல விருட்சம்     :    வன்னி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 8 மணி முதல் 12 மணி வரை, 
                                                        மாலை  5 மணி முதல் இரவு 7 மணி வரை. 

முகவரி : அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில், திருப்பந்துறை,-612 602. நாச்சியார் கோவில் போஸ்ட், கும்பகோணம் தாலுகா தஞ்சாவூர் மாவட்டம் Ph: 0435-244 8138, 94436 50826.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 127 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* ரமன், உமாதேவி, முருகன் ஆகியேகார் வழிபட்ட சிறப்புடையது. 

* கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரம். கொடிமரம் நந்தி பலிபீடம் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், நால்வர், சோழ மன்னன் மனைவி ஆகியோர் உள்ளனர். உள்சுற்றில் விநாயகர், மருகன், கஜலட்சுமி, நவக்கிரக சன்னதிகள், சுவாமி சன்னதியில் பழைமையான முருகப் பெருமான் உருவமுள்ளது.

* வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோயில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: