சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : கொழுந்தீஸ்வரர் ( அக்ர பரமேஸ்வரர்)

அம்மனின் பெயர் :தேனார் மொழியம்மை(தேனாம்பிகை எ மதுர பாஷினி)

தல விருட்சம்     :   வன்னி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
                              மாலை  5 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் கோட்டூர் அஞ்சல்-614 708.  திருவாரூர் மாவட்டம்.Ph: 04367 - 279 781, 97861 51763.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 175 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 


* மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம். இரண்டு பிரகாரம். உள்பிரகாரத்தில் விநாயகர், முருகன், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அகோர வீரபத்திரர், நந்திகேஸ்வரர், வல்லபகணபதி, நடராஜர், பிரம்மா, மகிஷாசுரமர்த்தினி, பைரவர், நவகிரகம், சண்டிகேஸ்வரர்,பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சன்னதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சன்னதியும், தொடர்ந்து சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், 

* இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: