புதன், 29 ஜூன், 2016

அருள்மிகு ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : ஆபத்சகாயேஸ்வரர்

அம்மனின் பெயர் : பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி

தல விருட்சம்   :  பவள மல்லிகை

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை

முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், 
ஆடுதுறை அஞ்சல் 612 101. 
திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 94 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சன்னதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் தழுவுகின்றது.


* தந்தை மகன் உறவில் பிரச்னை இருந்தால் சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபடுகின்றனர். 

* தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். 

* பவுர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்

* கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: