புதன், 29 ஜூன், 2016

அருள்மிகு மகாலிங்கம் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு மகாலிங்கம் திருக்கோவில்

சிவனின் பெயர்  : மகாலிங்கம்

அம்மனின் பெயர் : பெருமுலையாள்

தல விருட்சம்   :  மருதமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோவில், திருவிடைமருதூர் - 612 104. தஞ்சாவூர் மாவட்டம்.Ph:0435- 2460660

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 93 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இத்தலத்தை "" பஞ்ச லிங்கத்தலம்' எனறும் சொல்வர்

 * கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர்மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள்.

* இந்தியாவிலேயே கொல்லூரிலும்,திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சந்நிதி உள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

* இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் தங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லாத வகையில் கர்ப்பம் தரிக்க வேண்டுகின்றனர். அதுபோல் சுக பிரசவம் அடைவதற்காகவும் பெண்கள் பிரார்த்திக்கிறார்கள். 

* இத்திருக்கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம் வந்து மூலவரை வழிபடுவோர் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள்,பைத்தியம் முதலிய பெருநோய்களினின்றும், பாவங்களினின்றும் நீங்கி வேண்டும் நலன்களெல்லாம் எய்தி இன்புறுதல் இன்றும் கண்கூடு.

*  மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: