புதன், 29 ஜூன், 2016

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோவில்.

கோவில் பெயர் : அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோவில்.

சிவனின் பெயர்  : நாகேஸ்வரர், நாகநாதர்

அம்மனின் பெயர் :பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி)

தல விருட்சம்   :  செண்பகம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12.45 மணி வரை,
                                                          மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

முகவரி : அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோவில் , 
                          திருநாகேஸ்வரம் - 612 204.
                           தஞ்சாவூர் மாவட்டம். 
                            Ph:0435-246 3354, 94434 - 89839


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 92 வது தேவாரத்தலம் ஆகும்.

*அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும் போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.

* பிரதான வாயில் கிழக்கு கோபுரம் - ஐந்து நிலைகளையுடையது. நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சன்னதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன. இத்தலத்திற்கு மிகு அருகில் ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது.

*  ராகு குட்டித்தகவல்: அதிதேவதை - பசு பிரத்யதி தேவதை - நாகம் நிறம் - கருமை வாகனம் - சிம்மம் தானியம் - உளுந்து மலர் - மந்தாரை ரத்தினம் - கோமேதகம் வஸ்திரம் - நீலம் நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம் நட்புவீடு - மிதுனம், கன்னி, துலாம் பகைவீடு - கடகம், சிம்மம் ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம்.

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: