செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்)

அம்மனின் பெயர் : பசும்பொன் மயிலாம்பிகை

தல விருட்சம் : பராய் மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்



முகவரி : அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோவில், திருப்பராய்த்துறை, திருச்சி. 639 115. Ph 99408 43571

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 66 வது தேவாரத்தலம் ஆகும்.

* சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். புரட்டாசி மாதம் 18ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது.

* கருவறைக்கு பின்புறம் கோஷ்டத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். தெட்சிணாமூர்த்தி தனி மண்டபம் போன்ற அமைப்பில் கோஷ்டத்தில் காட்சி தருகிறார். ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ள விநாயகர் நின்றகோலத்தில் இருக்கிறார். இவரை "பரளி விநாயகர்' என்கின்றனர்.

* பராய்த்துறைநாதரை வணங்கிட தோல் நோய், புற்றுநோய் நீங்கும், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும், அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: