சனி, 25 ஜூன், 2016

அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்: அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : பதஞ்சலீஸ்வரர்ந்தளேஸ்வரர்

அம்மனின் பெயர் : கோல்வளைக்கையம்பிகை

தல விருட்சம் :  கோல்வளைக்கையம்பிகை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
                               மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை

முகவரி : அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில், 
கானாட்டம்புலியூர்-608 306, கடலூர் மாவட்டம். 
Ph 0 4144 & 208 508, 208091, 93457 78863.

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 32 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளை "அம்புஜாட்சி', "கானார்குழலி' என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். இவளது சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர்..


* கோயில் அமைப்பு கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகனும் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். தன் மாமாவிற்கு மரியாதை செய்யும்விதமாக முருகன் நின்ற கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.

* நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: