வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்



கோவில் பெயர் :  அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   சிவலோகநாதர்

அம்மனின் பெயர் :சவுந்திரநாயகி

தல விருட்சம் :    புங்கமரம்


கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
                               மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முகவரி :  அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில், 
திருப்புங்கூர் - 609 112. நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 09486717634



கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இது 20 வது தேவாரத்தலம் ஆகும்.

* இராஜேந்திர சோழன் காலத்தில் கோயில் திருப்பணிகள் நடந்துள்ள கோயில்.

* நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகி இருக்கச் சொன்ன தலம்.

* இத்தலத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு திருப்புன்கூர் என்ற பெயர் வந்தது.

* நாக தோசம், பூர்வ ஜென்ம பாவ தோசம் ஆகியவை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தங்கள் தோசங்கள் நிவர்த்தி ஆகும்.

* இத்தலத்தில் புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.


முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: