வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர்திருக்கோவில்






கோவில் பெயர் :  அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   மகாலட்சுமிபுரீஸ்வரர்

அம்மனின் பெயர் : உலகநாயகி

தல விருட்சம் :    வில்வம்


கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
                                                    மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி :  அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில், 
திருநின்றியூர் - 609 118. நாகப்பட்டினம் மாவட்டம்.
   Ph: 04364 283 261, 283 360, 94427 79580.


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 19 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* கோயிலின் ராஜகோபுரம் 3 நிலை உடையது. தலவிநாயகர்: செல்வகணபதி. கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே  இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான்.

* சுவாமி, தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னதி உள்ளது.  அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய  மயில் வாகனத்துடன் இருக்கிறார்.

* கடன் தொல்லை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை.

* தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பரிகார பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: