வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  சவுந்தரேஸ்வர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  சவுந்தரேஸ்வரர் (அழகியநாதர், தாலவனேஸ்வரர்)

அம்மனின் பெயர் :  பிரஹந்நாயகி, பெரியநாயகி

தல விருட்சம்     :   பனைமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
                                                   மாலை  5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு சவுந்தரேஸ்வர்திருக்கோவில் 
திருப்பனையூர் - 609 504, திருவாரூர் மாவட்டம்.Ph:04366-237 007

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 136 வது தேவாரத்தலம் ஆகும்.

*   இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* பிரகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது. அடுத்து விநாயகர் சன்னதி உள்ளது. கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சன்னதி உள்ளது. இக்கோயில் கி.பி.11 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் ""இராசேந்திர சோழப் பனையூர்'' என்று குறிக்கப் பெறுகின்றது சொல்லப்படுகிறது.

* பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: