திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு தில்லை காளி திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு தில்லை காளி திருக்கோவில்


அம்மனின் பெயர் : தில்லை காளி, பிரம்ம சாமுண்டீஸ்வரி



கோவில் திறக்கும் நேரம் :    காலை 6.30.மணி முதல் 12 மணி வரை,
                               மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முகவரி : அருள்மிகு தில்லை காளி திருக்கோவில் சிதம்பரம் - 608 001, கடலூர் மாவட்டம். Ph: 04144 - 230 251

கோவில் சிறப்பு :


* பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு "தில்லையம்மன்' என்ற பெயரும் உண்டு. இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். இவளுக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும். தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள். இப்படி செய்வதால் அம்மன் மகிழ்ந்து வேண்டும் வரம் தந்திடுவாள் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுக்கிழமை ராகு காலம், பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இவளுக்கு சிறப்பு பூஜை நடக்கும்.

* மகம் நட்சத்திரத்திற்கு இவள் அதிதேவதை என்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

* அதிசயத்தின் அடிப்படையில்: பிரம்மனை போல் நான்கு முகத்துடன் தில்லை காளி தனி சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை' என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷண ரூபிணி' என்ற பெயரிலும் அருளுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமைகளில் இவர்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: