வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு  சேஷபுரீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர்

அம்மனின் பெயர் :  பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி

தல விருட்சம்     :    வன்னி

கோவில் திறக்கும் நேரம் :   காலை  7 மணி முதல் 12.30 மணி வரை, 
                                                             மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

முகவரி : அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பாம்புரம்- 612 203. திருவாரூர் மாவட்டம். Ph:0435 246 9555, 94439 43665, 94430 47302.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 121 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* வழிபட்டோர்: பிரம்மா, இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி, தட்சன், கங்காதேவி, சூரியன், சந்திரன், சுனிதன், கோச்செங்கண்ணன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

*   ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்.

* போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசா நடந்தால், 7 வருட கேது தசா நடந்தால், லக்னத்திற்கு 2ல் ராகுவோ, கேதுவோ இருந்து, லக்னத்திற்கு 8ல் கேதுவோ, ராகுவோ இருந்தால், ராகு புத்தி, கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், இருபாலருக்கும் திருமணத்தடை இருந்தால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பைக் கொன்றிருந்தால், கடன் தொல்லைகள் இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: