சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  சதுரங்க வல்லபநாதர்

அம்மனின் பெயர் :   கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி 
                                       என இரண்டு அம்மன் உள்ளனர்.

தல விருட்சம்     :   பலாமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, 
                                                 மாலை  4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோவில், 
பூவனூர்-612 803  திருவாரூர் மாவட்டம்.Ph:94423 99273

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 166 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

* விஷ்ணு, பிரம்மா, இந்திரன், விநாயகர், முருகன், சுகமுனிவர், அகத்தியர் ஆகியோர் பூஜை செய்துள்ளனர்.

* ஆஸ்த்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை. பணம் கொடுக்கல் வாங்குதலில் பிரச்னை, திருமணத்தடை, குழந்தை பாக்கியத்திற்கு சாமுண்டீஸ்வரியை வழிபாடு செய்வது சிறந்த பலனைத்தரும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: