சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு மந்திரபுரீஸ்வரர்   திருக்கோவில்

சிவனின் பெயர்   : பாரிஜாதவனேஸ்வரர் என்ற களர்முளைநாதேஸ்வரர்

அம்மனின் பெயர் :   பெரிய நாயகி, பிருகந் நாயகி

தல விருட்சம்     :   மாமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                                                  மாலை  4 மணி முதல் இரவு 9 மணி வரை

முகவரி : அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோவில்,கோவிலூர், முத்துப்பேட்டை - 614 704.  திருவாரூர் மாவட்டம். 04369 - 262 014, 99420 39494

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 170 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

* வெண்மை நிறத்துடன் அமிர்த சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கருவறைச்சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும், மூன்று திருவடிகளுடன் காட்சி தருகிறார்.

* கோயில் 5 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரங்களுடன் விளங்குகிறது. கோயிலின் மேற்கு பகுதியில் வருணன் பூஜித்த லிங்கம், ராமர் பூஜித்த லிங்கம், மார்க்கண்டேயர் பூஜித்த லிங்கம், விஸ்வாமித்திரர் பூஜித்த லிங்கம் உள்ளது. மிகவும் பழமையான கோயில் என்பதால் இங்கு நவகிரகம் கிடையாது. நவகன்னிகைகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள்.

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: