வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்

அம்மனின் பெயர் :  அங்காளம்மன்

தல விருட்சம்     :  வேம்பு

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி : அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்முத்தனம் பாளையம்
திருப்பூர் மாவட்டம் - 641 606, .Ph:0421-220 3926, 224 0412.

கோவில் சிறப்பு : 

* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இத்தலத்தில் அம்மன் மூலஸ்தானத்தில் மூலவருக்கு வலது பக்கம் சுயம்பு புற்று விடிவில் அருள்பாலிக்கிறார்.

* சுயம்பு மூர்த்தியாக மிகவும் சக்தியுடன் எழுந்தருளியுள்ள அங்காளம்மனை திருமணத்தில் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்களும், செல்வ வளம் விரும்புபவர்களும், தீராத நோய் உள்ளவர்களும், சர்ப்பம் மற்றும் பிற தோஷம் உள்ளவர்களும் அங்காளம்மனை மனதார வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும். பஞ்ச விநாயகர்களையும் தரிசனம் செய்தால் துன்பங்கள் பஞ்சாய் பறக்கும் என்பது ஐதீகம். குழந்தையில்லாத பெண்கள் இந்த கணபதியை வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது கமலகிரிப்புலவரின் அருள் வாக்காகும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: