செவ்வாய், 12 ஜூலை, 2016

அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு பாடலீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  பாடலீசுவரர் (பாடலீசுவரர், கன்னிவனநாதன் 

அம்மனின் பெயர் :  பெரியநாயகி ( பெரியநாயகி, தோகையம்பிகை)

தல விருட்சம்     :   பாதிரிமரம்

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி        

முகவரி : அருள்மிகு பாடலீசுவரர் திருக்கோவில், திருப்பாதிரிப்புலியூர்-607 002, கடலூர் மாவட்டம்.PH:04142- 236 728, 98949 27573, 94428 32181

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 229 வது தேவாரத்தலம் ஆகும்.

* சப்தமாதாக்கள் சன்னதி இங்கு கோயிலை ஒட்டியே இருக்கும். சமயக்குரவர்கள் நால்வருள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே இவ்வூர் தோன்றாத் துணைநாதரும் அவர் கோயில் கொண்டருளிய திருக்கோயிலும் மிகவும் சிறப்புடையதாக விளங்கி இருக்கிறது.

* இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. இத்தலத்தில் வேண்டிக்கொள்ளும் எல்லாவிதமான பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. விரதமிருந்து சிவகரைத்தீர்த்தத்தில் குளித்தால் நினைத்தது நிறைவேறுகிறது. மேலும் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: