வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : அபிமுக்தீஸ்வரர் ( பிரிய நாதர்)

அம்மனின் பெயர் :  அபினாம்பிகை (ஏழவார் குழலி)

தல விருட்சம்     :   வன்னி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 8 மணி முதல் 11 மணி வரை, 
                                                  மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில், பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை -610 104,
 Ph:04366 - 325 425

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 155 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

* கால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் அருள்பாலிக்கிறார்கள்.

* திக்குவாய் உள்ளவர்கள், பேசும் ஆற்றல் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். சுக்கிரனுக்குரிய பரிகார ஸ்தலம். கடன் பிரச்னை உள்ளவர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: